உலக புகழ் பெற்ற கிறிஸ்துவ திருத்தலங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டத்தில் அமைந்திருக்கும் சிறு கிராம பகுதில் மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலயமும் ஒன்று.
அற்புதங்கள்;
நோய்கள் தீங்கும் , பேய்,பில்லி சூனியங்கள் அகலும், வறுமை செழுமையாகும் ,வேலையின்மை,தொழில் வளர்ச்சி பெருகும்.என இத்திருத்தலத்தில் அண்ணல் செபஸ்தியாரை வழிபட வரும் பக்தர்களின் உண்மை கருத்துகள்.வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்தி கடன் செய்ய வரும் பகதர்கள் ஏராலம். அண்ணலிடம் வேண்டிக்கொள்வது நிறைவேறும் என்பதற்க்கு மங்கனூர் புனித செபஸ்தியாரின் கூடுதல் சிறப்பு.
திருவிழா நாட்கள்;
ஒவ்வொறு வருடமும் கிறிஸ்து இயேசு உயிர்தெழுந்த முதல் வாரத்தில் ( ஏப்ரல் மாதம்) மிக பிரசித்தமாக திருவிழா கொண்டாடபடுகிறது . அதேபோல கொரோன பேரிடர் காலத்திற்க்கு பின் இந்த வருடம் 19/04/2022 அன்று நடைபெற்றது.
தேரின் சிறப்பு;
முதல் தேரில்; காவல் சம்மனசு என்னும் தூய கபிரியேல் அதிதூதர் அணைத்திற்க்கும் முன்பாக அணிவகுத்தி சென்றார்..
இரெண்டாம் தேரில் ; காவல் தெய்மாக விளங்கும் தூய சந்தியாகப்பர் திருவுருவம் கொண்டு சென்றார்.
மூண்றாம் தேரில் ; நம் பாதுகாவலரம் புனித அந்தோணியார் அவர்கள்.
நான்காம் தேரில் ; ஞானத்தின் சுருபம் கல்வியின் தந்தை புனித சூசையப்பர் அவர்கள்.
ஐந்தாம் தேரில் ; தீர்க்க தரிசணங்களை நிறைவேற்றிய உயிர்பின் ஆண்டவர்.
ஆறாம் தேரில் ; அண்டி வருவோர்க்கு அடைக்கலம் தரும் தூய அடைக்கல அன்னை.
ஏழாம் தேரில் ; பார் போற்றும் , நோய் நொடித்தீரக்க வல்லவர் மங்கனூர் புனித அண்ணல் செபஸ்தியார் திருவுருவம் கொண்டு மின்னொளி தாங்கி வீதி உலா சொன்றார்.
No comments:
Post a Comment
thanks for visiting🥀