ஞானத்தை படைத்த இறைவனை
ஞானத்தை படைத்த இறைவனை
புனிதரே தூயரே அந்தோனியாரே!
உம் அருட்கரம் உலகெல்லாம்
அரவானைப்பது போல..
நீலவானை முட்டி நிர்க்கும்
கொடிகம்பம் தனிலே..
ஐயா உம் திருக்கொடி
அழகாக பறக்கின்றதே..
எட்டுதிக்கும் திரண்டு எழும்
பக்தர்கள் அனைவரையும் வருக வருக!!
அன்போடு அழைக்குதையா
புனிதரின் திருக்கொடியே வாழ்கா!
நலம் தரும் ஜீவனதையே நீ வாழ்க!
கோடி அற்புதரே வாழ்க!!
ஞானத்தை படைத்த இறைவனை
திருகரங்களில் ஏந்திடும் புனிதரே
கோலமிகுந்த உம் கொடியும்
இரு கரங்களை விரித்தே அழைக்குதே
வானிலே அசைந்து ஆட
என் மேனியும் சிலிர்த்து மகிழுதே..
ஞானத்தை படைத்த இறைவனை!
திருவே எழில் உருவே
திருக்கொடியே நீ வாழ்க!
அழகே இறை கரமே
புதுமை புனிதரே வாழ்க!
ஞானத்தை படைத்த இறைவனை!
வியப்பினில் ஆழ்த்திடும் வழிகளில்
அந்த இறைவன் நம்மை நடத்துவார்!
சொல்லுதற்கரிய செயல்களை தினம்
புரிந்து நம்மை வளர்க்கிறார்!
அவரது பணிகளை தொடர
நம் புனிதரை தேர்வு செய்தார்!
இறையருள் அவர்மேல் பொழிந்து
வானுயர அவரை உயர்த்தினார்..
அன்பர் புகழ் வானுயர்ந்து
கொடி பாறக்குது
ஆழ்கடலைத் தாண்டி நின்று
மனம் பறக்குது
பக்தர்களின் கூட்டம் இங்கு
வளர்ந்து பெருகுது
வலிமை மிக்க புனிதர் கரம்
உரக்க மறந்தது
மனித மாண்பின் சிகரமே..
இறைவன் அன்பின் திலகமே..
மெய் ஞான களஞ்சியமே..
வாழ்க வாழ்கவே!!
உலகம் வந்த வள்ளலே..
உலவும் அருளின் தென்றலே..
அந்தோனி புனிதரே வாழ்க! வாழ்கவே!!
ஞானத்தை படைத்த இறைவனை
திருகரங்களில் ஏந்திடும் புனிதரே
கோலமிகுந்த உம் கொடியும்
இரு கரங்களை விரித்தே அழைக்குதே
வானிலே அசைந்து ஆட
என் மேனியும் சிலிர்த்து மகிழுதே..
ஞானத்தை படைத்த இறைவனை!
சாதி மத இன பேதம் கடந்து
நிற்பவன் நீயே
நம்பிக்கை ஒன்றே வேதம் என
வந்தோரை அரவணைத்தாயே..
செவ்வாய் கிழமை உன் நாளாம்
அன்று ஜெபிப்பவர்க்கேத் திருநாளாம்
நவநாள் ஒன்பது வாரம்
கடைபிடித்தால் நீங்குமே பாரம்
உந்தன் புகழ் வானின்று சிறகடிக்குது..
பக்தர் நாவில் உந்தன் நாமம்..
தினம் ஒலிக்குது..
அன்டி வந்து வேண்டுவோரை
அரவணைக்குது..
பாச அலையில் இதயமோ மூழகி மகிழுது..
இருளை பழிக்கும் ஒளியே..
அலகை மிதிக்கும் பதமே..
கருணையின் தாய்மையே
வாழ்க! வாழ்கவே!!
பதுவை நகரின் நாயகனே
புதுமை புலரும் தாயகமே
அந்தோனி புனிதரே வாழ்க! வாழ்கவே!!
ஞானத்தை படைத்த இறைவனை
திருகரங்களில் ஏந்திடும் புனிதரே
கோலமிகுந்த உம் கொடியும்
இரு கரங்களை விரித்தே அழைக்குதே
வானிலே அசைந்து ஆட
என் மேனியும் சிலிர்த்து மகிழுதே
ஞானத்தை படைத்த இறைவனை!
திருவே எழில் உருவே
திருக்கொடியே நீ வாழ்க!
அழகே இறை கரமே
புதுமை புனிதரே வாழ்க!2
Our saint Antony pray for us 🥀
No comments:
Post a Comment
thanks for visiting🥀