என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன்
எழுந்து வருகின்றார்
என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன்
எழுந்து வருகின்றார்
எண்ணில்லா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார்
தலைவன் தருகின்றார்
என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன்
எழுந்து வருகின்றார்
எண்ணில்லா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார்
தலைவன் தருகின்றார்
உதயம் காண விழையுமோர் மலரைப் போலவே
இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுதே -2
பகலை மறைக்கும் முகிலாய் பல பழிகள் சூழ்ந்ததே
அந்த முகிலும் இருளும் குறையும் தீர
முழுமை தோன்றுமே
என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன்
எழுந்து வருகின்றார்
எண்ணில்லா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார்
தலைவன் தருகின்றார்
என்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமே
என்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன் -2
என்று பகர்ந்த இறைவா என்னை அணைக்க வாருமே
உந்தன் அன்பு விருந்தை நாளும் அருந்தி
அமைதி காணுவேன்
என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன்
எழுந்து வருகின்றார்
எண்ணில்லா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார்
தலைவன் தருகின்றார்
ஆயன் உம்மை நீங்கியே
இருளில் ஓடினேன்
பாவம் என்னும் புதரிலே
வீழ்ந்து வாடினேன் -2
பரிவு கொண்ட இறைவா
என்னை தேடி வந்தீரே
மனம் கனிந்து இன்று
பாடுகிறேன் உவகை கீதமே
என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன்
எழுந்து வருகின்றார்
எண்ணில்லா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார்
தலைவன் தருகின்றார்
glory to god
ReplyDelete