கருணை தெய்வமே கண்பாரும்
கருணை தெய்வமே கண்பாரும்
karunai dheivame kan parum
கருணை தெய்வமே கண்பாரும்
எங்கள் பாவங்களை நீர் பொறுத்தருளும்
*உடலும் மனமும் அறிவும் ஒன்றுசேர்ந்து
உம்மை எதிர்த்ததையா (2)
தேவ வாக்கின் வழியை மனம்
பன்முறை அறிந்தும் வெறுத்ததையா
பாவச்சேற்றை வாழ்வில் எம்வாழ்வே
கொண்டு நிறைந்ததையா
கருணை தெய்வமே கண்பாரும்
எங்கள் பாவங்களை நீர் பொறுத்தருளும்
*பாதை தெளிவுறத் தெரிந்தும் - அதைப்
பார்த்து நாங்கள் நடக்கவில்லை (2)
உண்மை விளக்கு எரிந்தும் - அதன்
ஒளியின் அருகே வாழவில்லை
இறைவன் அன்பு அழைத்தும் - அதை
உணர்ந்த பின்னும் திருந்தவில்லை
கருணை தெய்வமே கண்பாரும்
எங்கள் பாவங்களை நீர் பொறுத்தருளும்
No comments:
Post a Comment
thanks for visiting🥀